Nagaratharonline.com
 
வேலங்குடி உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித்திருவிழா  Mar 3, 17
 
வேலங்குடி உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் சுவாமிக்குச் செலுத்திய அரிவாள்கள் கோயில் மண்டபத்தில் குவிக்கப்பட்டிருந்தன. மேலும் சாம்பிராணி பிரியரான கருப்பருக்கு பக்தர்கள் சாம்பிராணி மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் மூன்று நாள்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமியின் காவல் வாகனமான குதிரைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். விழாவையொட்டி பொன்னமராவதி,திருப்பத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.