Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரியில் புத்தாக்கப் பயிற்சி  Feb 18, 17
 
மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர்கள் புத்தாக்க பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தட்டம்மை டெல்டா மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர் சுபாஷ் காந்தி தலைமை வகித்து குழந்தைகள் நலம், தடுப்பூசிகள், தொற்றும் தொற்றாநோய்கள் குறித்து விளக்கினார். மருத்துவர் அருண் குமார் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் குறித்து விளக்கினார். சுகாதார ஆய்வாளர் நா.உத்தமன் பிறப்பு, இறப்பு பதிவுகள் குறித்து பயிற்சியளித்தார்.