Nagaratharonline.com
 
நெற்குப்பையில் மஞ்சுவிரட்டு: 30 பேர் காயம்  Feb 11, 17
 
நெற்குப்பையில் திங்கள்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மேலத்தெரு, கீழத்தெரு, நடுத்தெரு பகுதிகளில் தொழுவம் அமைக்கப்பட்டு மாடுகள் பகுதி வாரியாக அவிழ்த்து விடப்பட்டன.

சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பாய்ந்து சென்றன. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு சில மாடுகள் பிடிபட்டும் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியும் சென்றன.
இம்மஞ்சுவிரட்டில் 30 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு நெற்குப்பை, சுகாதார மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.