Nagaratharonline.com
 
ஆத்தங்குடி முத்துப்பட்டணம் : மூதாட்டி கொலை  Feb 11, 17
 
ஆத்தங்குடி முத்துப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு(74). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்துவருவதால் வள்ளிக்கண்ணு மட்டும் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரம் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அருகில் வசிப்பவர்கள் வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறம் வள்ளிக் கண்ணு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

தகவலறிந்த காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரனை நடத்தினார். இதுகுறித்து குன்றக்குடி காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.