Nagaratharonline.com
 
நெற்குப்பை சிவன் கோவிலில் ஆருத்திரா தரிசனம்  Jan 14, 17
 
நெற்குப்பை மரகதவல்லி சமேத மனமொத்த கண்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரையையொட்டி, ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது. உபயதார் அருணாசலம் கணேஷ்வர், தரிசனத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

விழாவில், நடராஜப்பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திருவாசகப் பாடல்கள் ஓதப்பட்டு, ஒவ்வொரு பாடலுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வலையபட்டி மலையாண்டி கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலீஸ்வரர் கோயில், புதுப்பட்டி சிவன் கோயில் உள்ளிடட கோயில்களில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது.