Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் ,சென்னை–பிள்ளையார் நோன்பு விழா  Jan 5, 17
 
 
சென்னை -41, பாலவாக்கம், 3/621, கிழக்கு கடற்கரை சாலையில்
உள்ள நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, 03/01/2017 அன்று மாலை திருவான்மியூர், கிழக்கு மாட வீதியில் உள்ள மஹாலக்ஷ்மி மஹாலில்
6 - ம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவை சிறப்பாக கொண்டாடியது.
திருவான்மியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள், தங்கள் குடும்பத்துடன் விழாவில்
கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டு.
இழை எடுத்து, இறை அருள் பெற்றனர்.

விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்களை, மன்றத்தின் தலைவர்,
முனைவர் M. சீனிவாசன் ( நச்சாந்துபட்டி) வரவேற்றார்.
மன்ற உறுப்பினர்களில் முதியவர்களான திரு. பொறியாளர்
M.ராமசாமி( கீழச்சிவல்பட்டி), முனைவர் M. சீனிவாசன் ( நச்சாந்துபட்டி), மற்றும் ஆறு. சுப்பிரமணியன் ஆகியோர் இழைகளை எடுத்துக்கொடுத்தனர்.

பொறியாளர். M. ராமசாமி, மங்கலப் பொருட்களை
ஏலம் விட்டபிறகு, இரவு விருந்து வழங்கப்பட்டது. நிறைவாக , செயலாளர் ஆறு. சுப்பிரமணியன் நன்றி கூற, பிள்ளையார் நோன்பு விழா
இனிது நிறைவேறியது .