Nagaratharonline.com
 
புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது  Dec 22, 16
 
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுக்களில் எதுவும் எழுதக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் இருக்கிறது. செல்லாது என்ற அறிவிப்பும் உள்ளது.
இருப்பினும்சிலர் கண்டதை எழுதுவது இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.நோட்டுக்களில் எழுதினாலும் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் குறைபாடு இல்லாமல் நடந்தது.

இந்நிலையில் புதிய ரூ.500,2000 நோட்டுக்களில் கண்டிப்பாக எழுதக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டில் ஏதாவது எழுதியிருந்தால் கண்டிப்பாக செல்லாது என்று அறிவுறுத்தியுள்ளனர். புதிதாக சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ரூ. 2000 நோட்டில் எழுதப்பட்ட சில ரூபாய்கள் வங்கிகளுக்கு வந்தன. அவைகளை வங்கி ஊழியர்கள் செல்லாது என்று திருப்பி அனுப்பினர்.