Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை : தமிழண்ணல் நினைவுதினம் அனுஷ்டிப்பு  Dec 20, 16
 
நெற்குப்பை உலகம் சுற்றிய தமிழர் சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் தொல்காப்பிய செம்மல் தமிழண்ணல் நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாவலர் ஆ.பழனி தலைமை வகித்தார். பெரி.மணிவண்ணன், பெரி.சோலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழண்ணலின் படைப்புகள் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கட்டுரை, பேச்சுப் போட்டி, வாசிப்புத்திறன் பயிற்சி முதலியன நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கபட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பி.வரதராஜன் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில் சாத்தப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், வாசகர் வட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நூலகர் கண்ணன் வரவேற்றார். முடிவில் வாசகர் வட்ட குழுத் தலைவர் எல்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.