Nagaratharonline.com
 
கம்பன் கழக போட்டிகள்  Dec 18, 16
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் மாநில அளவிலான கலை அறிவியல், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கம்பராமாயண, திருக்குறள் பேச்சு போட்டி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி வரும் ஜனவரி 28-ம் தேதி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது.

பேச்சு போட்டியில், ஒரு கல்லுாரியிலிருந்து இரண்டு மாணவர்கள் முதல்வர், தமிழ்துறை தலைவரிடம் வாங்கிய சான்றுடன் வந்து பங்கேற்கலாம். கம்பனில் மனித நேயம், கம்பனில் மனித உணர்வுகள், கம்பனில் மனித ஆற்றல் ஆகிய மூன்று தலைப்புகளில் ஒரு தலைப்பு போட்டி தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக அறிவிக்கப்படும். திருக்குறள் பேச்சு போட்டிக்கு குறள் காட்டும் இணை என்ற தலைப்பில் கல்வி - கேள்வி, அறிவு - பணிவு, ஆண்மை - பேராண்மை ஆகிய மூன்று தலைப்புகளில் ஒரு தலைப்பு அறிவிக்கப்படும். ஒப்புவித்தல் போட்டிக்குரிய பாடல்கள் பால காண்டம், அயோத்தியா காண்டத்திலிருந்து இடம் பெறும்.
இதற்கான பெயர் பட்டியலை ஜன.15-க்குள் கம்பன் கழகம், செட்டிநாடு டவர்ஸ், வள்ளுவர் தெரு, காரைக்குடி - 2 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும். விபரம் வேண்டுவோர் 94450 22137 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கம்பன் கழக செயலாளர் பழ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.