Nagaratharonline.com
 
NEWS REPORT: புதுக்கோட்டை நகரத்தார் மகளிர் சங்கப் புதிய நிர்வாகிகள்.  Nov 15, 16
 
புதுக்கோட்டை நகரத்தார் மகளிர் சங்கப் புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

புதுக்கோட்டை நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 2016-18 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவுக்கு நகரத்தார் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.
இதில், மகளிர் சங்கப் புதிய தலைவராக வள்ளியம்மை சுப்பிரமணியன், செயலராக சாந்தி சொக்கலிங்கம், பொருளாளராக

லதா அருணாசலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர்.
புதிய நிர்வாகிகளை மீனாட்சி ரவி, ஆத்தங்குடி மீனா சுப்பையா, இளைஞர் சங்கத் தலைவர் டி. கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இசைமணி நாகம்மை சுந்தரம் இறைவணக்கம் பாடினார். தலைவி ரமா பசுபதி வரவேற்றார்.

செயலாளர் மீனா வைரவன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்யாணி பழனியப்பன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.அரிமளம் ரெங்கநாயகி முத்துக்கண்ணன் மாணவ, மாணவிகள், எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகைகளை வழங்கிப் பேசினார்.

முன்னாள் தலைவி வள்ளிக்கண்ணு முத்து நன்றி கூறினார்.