Nagaratharonline.com
 
கொப்பனாபட்டி - ஆலவயல் பிரிவு சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்  Nov 7, 16
 
கொப்பனாபட்டி - ஆலவயல் பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கொப்பனாபட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பயணிகள் ஆலவயல் பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்கின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாததால் அங்கு பேருந்து காத்திருக்கும் பயணிகள் மழை, வெயிலில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.