Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்  Nov 5, 16
 
நற்சாந்துபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசக் கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திருநாவுக்கரசு தொடக்கிவைத்தார். கண் பரிசோதனை உதவியாளர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 24 பேர் கண் குறைபாடுள்ள நோயாளிகளாகக் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பரணீதரன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.