Nagaratharonline.com
 
கோவிலூரில் நகரத்தார் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்  Nov 4, 16
 
காரைக்குடி அருகே கோவிலூரில் நகரத்தார் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகரத்தார் சமூகத்தினர் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்த ஐ.பி.சி.என். என்ற உலக நகரத்தார் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பு சார்பில், 2017 ஏப்ரல் மாதத்தில் 3-ஆவது தொழில்முனைவோர் மாநாட்டை துபை நாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கோவிலூரில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தொடக்கிவைத்துப் பேசினார்.
கருத்தரங்கில், ஐ.பி.சி.என். 2017-இன் தலைவர் அண. சொக்கலிங்கம் மாநாட்டின் நோக்கங்கள் குறித்துப் பேசினார். ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அழ. முருகப்பன் வரவேற்றார்.
அழ. காசி விஸ்வநாதன் மாநாட்டு தொடர்பாக உள்ள பல்வேறு போட்டிகள் குறித்துப் பேசினார். தொழில் தொடங்க உதவி புரிதல், நிதி உதவி மற்றும் ஊக்குவிப்பு செய்யவும் ஐ.பி.சி.என். அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.