Nagaratharonline.com
 
NEWS REPORT: நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை  Oct 12, 16
 
கோவிலுார் மடாலய சனாதன தர்ம உலக பல்கலை கல்வி நிறுவனங்கள் சார்பில், அதன் நிறுவனர் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் மணிமொழி மோகன் வரவேற்றார். தொடக்க பள்ளி முதல்வர் மணிமொழி நன்றி கூறினார்.

ஆலோசகர் குமரப்பன், அறநிலை உறுப்பினர்கள் கண்ணப்ப செட்டியார், ராமநாதன் செட்டியார், கல்லுாரி முதல்வர்கள் செல்லப்பா, ரவீந்திரன், மாயாண்டி பங்கேற்றனர். திருவாசக முற்றோதல், வேதாந்த மாணவர்களின் கைவல்ய நவநீதமுற்றோதல் நடந்தது.