Nagaratharonline.com
 
NEWS REPORT: அம்பு எய்யும் விழா ( மகர்நோன்பு )  Oct 12, 16
 
விஜயதசமியை முன்னிட்டு, நெற்குப்பை நகர சுப்பையா கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு, நல்லூரணி கரை அருகில் பெரிய கண்மாய் பொட்டலில் அம்பு எய்து பிறகு திரும்பி ராம. சா மடத்திற்கு எழுந்தருளியது .திரளான நகரத்தார் பெருமக்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தேவகோட்டையில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நகர சிவன் கோயில் குளக்கரையில் திரளான மக்கள் கூட்டத்திற்கு நடுவே மேளதாளங்கள் முழங்க அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்புகளை எடுத்துச்சென்றனர்.