Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை : 155 பவுன் கொள்ளை வழக்கில் மூவருக்கு 13 ஆண்டு சிறை  Oct 3, 16
 
நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது வீட்டில் 1996 மார்ச் 30 ல் 155 பவுன் நகை; 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்தனர்.

மதுரை பெரியசாமி, 58, பொட்டகவயல் ராஜபாண்டி, 76, மதுரை செல்லுõர் வடிவேலு, 40, செந்தில், 43, வழிக்குளம் கணேஷ்மூர்த்தி, 55, ஆனையூர் அய்யப்பன், 25, ஆகியோரை கைது செய்தனர். இதில் வடிவேலு, அய்யப்பன் இறந்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, பெரியசாமிக்கு 9 ஆண்டு சிறை; ஆயிரம் ரூபாய் அபராதம்,

ராஜபாண்டி, கணேஷ்மூர்த்தி, செந்தில் ஆகிய மூவருக்கு தலா 13 ஆண்டு சிறை; 1,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.