Nagaratharonline.com
 
NEWS REPORT: பல்லவன் அதி விரைவு ரயில் நேரம் மாற்றியமைப்பு  Sep 28, 16
 
காரைக்குடியில் தற்போது காலை 4.30 மணிக்கு புறப்படும் பல்லவன் அதி விரைவு ரயில் அக்டோபர் ஒன்று முதல், காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25-க்கு பதிலாக 10.55-க்கு காரைக்குடி வரும்.
சென்னையில் மாலை 5 மணிக்கு கிளம்பும் சேது விரைவு ரயில் 5.45 மணிக்கு கிளம்பி, இரவு 12.30 மணிக்கு காரைக்குடிக்கு வந்து சேரும். காலை 5.20 மணிக்கு வரும் சிலம்பு வாராந்திர ரயில் அதிகாலை 4 மணிக்கு காரைக்குடிக்கு வரும், வகையில் ரயில்வே கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தொழில் வணிக கழக தலைவர் முத்து பழனியப்பன், செயலாளர் சாமி திராவிட மணி தெரிவித்துள்ளனர்.