Nagaratharonline.com
 
காரைக்குடியில் உலக சுற்றுலா தின விழா  Sep 27, 16
 
காரைக்குடியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காலையில் காரைக்குடி ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் செட்டிநாடு பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் சொ. சுப்பையா சிறப்புரையாற்றினார். மதுரை தானம் அறக்கட்டளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கே. பாரதி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிதம்பரம் ஆகியோர் பேசினர்.