Nagaratharonline.com
 
சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்  Sep 3, 16
 
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 04/09/16 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் வருடம்தோறும் சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாணத்தை நடத்தி வருகிறார்கள்.

தற்போது, 7-ஆவது ஆண்டாக திருக்கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து, வள்ளி மணவாள முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பிறகு சுவாமி புறப்பாடும், அன்னதானமும் நடைபெறும்.
திருமணம் கைகூடாதோர், இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.