Nagaratharonline.com
 
BSNL - Land Line புதிய தொலைபேசி இணைப்பு பெறுவோருக்கு இலவச அழைப்பு வசதி  Aug 27, 16
 
BSNL காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் வி. ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல் அனைத்து தரைவழி தொலை பேசிகளிலிருந்தும் இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாள்முழுவதும் முற்றிலும் இலவசமாக பேசும்வசதி ஆக. 15ஆம்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி ஏற்கனவே உள்ள தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இலவசமாக பேசும் வசதியுடன் கூடிய அனைத்து தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.

இதுதவிர மாதக் கட்டணம் ரூ.49 கொண்ட புதியதரைவழி தொலைபேசித் திட்டத்தையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் புதிய இணைப்புகளுக்கு அமைப்புக்கட்டணம் ரூ. 600 முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் இணைப்புகளை பெறுபவர்களுக்கு பி.எஸ்.என்.எல் பிரீபெய்டு சிம்கார்டு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் இணைப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் அளவில்லாத இலவச அழைப்புவசதி மற்றும் தினமும் இரவு இலவச அழைப்பு வசதி கிடைக்கும். இந்த இணைப்புகள் 6 மாதங்களுக்குப் பிறகு பொதுத்திட்டத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.