Nagaratharonline.com
 
பேருந்து மோதி பெண் சாவு  Aug 22, 16
 
சண்முகநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் மனைவி மங்கையக்கரசி(55). மகன் கோபிநாத்(22). இவர்கள் இருவரும் தேவகோட்டையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் இடித்தது. இதில் நிலைதடுமாறி மங்கையர்க்கரசி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

கோபிநாத் லேசான காயமடைந்தார். தேவகோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் மங்கையர்க்கரசி உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஆறாவயல் காவல்துறையினர், தனியார் பேருந்து ஓட்டுர் படமாத்தூரை சேர்ந்த செந்தில்குமாரை(43) கைது செய்து விசாரித்துவருகின்றனர்.