Nagaratharonline.com
 
NEWS REPORT: தேவகோட்டையில் நூல்கள் வெளியீடு  Aug 3, 16
 
தேவகோட்டை நால்வர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவில் சி.ராமசாமி எழுதிய அருசோ வரலாறு என்ற நூலை ஜமீன்தார் நாராயணன் தலைமையில் பழனி குருநாதர் வெளியிட்டார். மேலும் அரு.சோமசுந்தரன் எழுதிய நகரத்தார் 96 ஊர் பாதயாத்திரை திருவாசகம் முற்றோதல் என்னும் நூலை ஈரோடு நகரத்தார் சங்கத் தலைவர் சிவசுப்ரமணியன் வெளியிட்டார். பாதரக்குடி, துலாவூர் ஆதீனகர்த்தர்கள் ஆசி கூறினர். பேராசிரியர் சுப்பையா, கவிஞர் உமா, பேராசியர் தேவநாவே, சித்தர் சிதம்பரம், மன்னார்குடியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் பலர் நூல் குறித்து பாராட்டிப் பேசினர்.