Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது  Jul 19, 16
 
நற்சாந்துபட்டியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புதுகை ஓசிஐயு- நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துணை கண்காணிப்பாளர் கணேசன் உத்தரவின்பேரில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் நற்சாந்துபட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அரிமளம் செட்டியாபட்டியைச் சேர்ந்த க. வெள்ளைச்சாமி, புதுகை கலீப் நகரைச்சேர்ந்த மு. அப்துல்கரீம் ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்த 41, 250 லாட்டரி சீட்டுகளையும், ரூ. 16 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.