Nagaratharonline.com
 
பொன்னமராவதி அருகே அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி  Jun 30, 16
 
பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தின் சக்கரம் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு காலை 8.15 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று சென்றது. மேக்கினிப்பட்டி வளைவில் அந்தப் பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதைக் கண்ட பேருந்து ஒட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தினார். பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர்.