Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் புதிய மின்மாற்றி தொடக்கம்  Jun 30, 16
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலுக்கென பிரத்யேகமாக மின்மாற்றி புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கென்று பிரத்யேகமாக 250 கிலோவாட் திறனுள்ள மின்மாற்றி உருவாக்கப்பட்டு புதன்கிழமை இயக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஏ. அழகப்பன் வழிகாட்டுதலின்படி, பிள்ளையார்பட்டியில் மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பிள்ளையார்பட்டியில் பெருகிவரும் வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கும் அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், நிலைமையை சமாளிக்க கோயிலுக்கென தனியாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.

ஸ்ரீதர் குருக்கள் நடத்திய பூஜையைத் தொடர்ந்து, இந்த மின்மாற்றியை அறங்காவலர்கள் வீ. ராமநாதன் செட்டியார், எம். தண்ணீர்மலைச் செட்டியார் ஆகியோர் முன்னிலையில் செயற்பொறியாளர் மணிமாறன், உதவிச் செயற்பொறியாளர்கள் ஆர். சிங்காரவேலன், கணேசன், ஜான் எப் கென்னடி ஆகியோர் இயக்கி வைத்தனர்.