Nagaratharonline.com
 
NEWS REPORT: மேலைச்சிவபுரி கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்  Jun 28, 16
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் க. கனகராசு தலைமை வகித்தார். பொன்னமராவதி காவல்துறை பொறுப்பு ஆய்வாளர் மகேஷ், உதவி ஆய்வாளர் செபஸ்தியான் ஆகியோர் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் கல்லூரி மாணவர்களின் பங்கு, போதைப்பொருள் வைத்திருத்தலுக்கான தண்டனை, போதைப்பொருள் விளைவிக்கும் தீமைகள் குறித்து விளக்கினர்.