Nagaratharonline.com
 
NEWS REPORT: "சிவகங்கை' உதய தின கொண்டாட்டம்..(286 ஆண்டுகள்)  Jan 27, 16
 
சிவகங்கை சமஸ்தானம் கடந்த 1730 ஜன.,27ல் உதயமானது. முதல் மன்னர் சர்வர்ணதேவர் தோற்றுவித்தார். இந்த நகரம் துவங்கி, 286 ஆண்டு ஆகிவிட்டது.


முதல் முறையாக இதை கொண்டாடும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் 286 எண்ணை குறிக்கும் வகையிலான வடிவில் மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அவர்கள் பலூன்களை பறக்க விட்டனர்.

நிகழ்ச்சியில் மன்னர் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவர் மதுராந்தகிநாச்சியார், உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மு.பாலகிருஷ்ணன் எழுதிய" சிவகங்கை நகர் தோன்றிய வரலாறு' என்ற புத்தகம் வினியோகிக்கப்பட்டது.