Nagaratharonline.com
 
நெற்குப்பையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்  Jan 17, 16
 
நெற்குப்பை நகர சுப்பையா கோயில் அருகே கூடிய மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள், பழனியப்பன் தலைமையில் கோயிலில் இருந்து ராஜ வீதி, மேலப்பிள்ளையார் கோயில் வீதி, பெரியகடை வீதி வழியாக கருப்பு வில்லை அணிந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பேருந்து நிலையம் வந்தடைந்தனர். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மஞ்சுவிரட்டுக்கான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.