Nagaratharonline.com
 
ராமேசுவரம் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை பூஜைகள் தொடக்கம்  Jan 17, 16
 
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் நந்தவனப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் முதல்கால யாகபூஜை சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இந்த பூஜையில் 108 குண்டங்கள் அமைக்கப்பட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மூத்த குருக்கள் பிச்சை தலைமையில் 216 சிவாச்சாரியார்களால் பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் அலங்காரத்துடன் 25 தலைகளுடன், 54 கைகளுடன் மகாசிவன் உருவம், பிள்ளையார், மூன்று முகம் கொண்ட முருகன், சிவன், பார்வதி ஆகியவை இடம்பெற்றிருந்தன.