Nagaratharonline.com
 
NEWS REPORT: அயல்நாடு வாழ் நகரத்தாரின் பெற்றோர் அமைப்பு (நன்றி) குடும்ப விழா  Jan 15, 16
 
சென்னையில் வசிக்கும் - அயல்நாடு வாழ் நகரத்தாரின் பெற்றோர் அமைப்பு (நன்றி) குடும்ப விழா சிறப்புக் கூட்டம் அடையார் காந்திநகர் கிளப் அரங்கில் அதன் தலைவர் விப்ரோ வீ.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் ஏ.சுப்பையா வரவேற்புரை ஆற்றினார். புரவலர் எஸ்.வி.சிங்காரம், துணைத் தலைவர்கள் வி.கே.என்.கண்ணப்பன், லேனா காசிநாதன் முன்னிலை வகித்தனர். புதிய உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வீ.ஆர்.முத்துக்கருப்பன் அவர்களது பணியைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.

மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “அந்தநாள் நினைவுகள்” என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் பல்வேறு கருத்தினை எடுத்துரைத்தார். பின்னர் வெள்ளபாதிப்பு பகுதிமக்களுக்கு உதவுதல், மருத்துவ முகாம், சுற்றுலாவுடன் கூடிய குடும்ப சந்திப்பு, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து முடிவு செய்தனர். 70 வயதுக்கு மேல்உள்ளவர்களுக்கு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்தனர். பொருளாளர் சிடி.மெய்யப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் வீ.ஆர்.சுந்தரம், ரவி வெங்கடாஜலம், ஏ.ஆர்.ராமநாதன், எம்.எல்.எம்.சுப்பிரமணியன், எஸ்.சுப்பு சுந்தரம், என்.வெங்கடாஜலம், என்.நடேசன், டி.எம்.கந்தசாமி, ஏ.ஆர்.அருணாசலம், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.