Nagaratharonline.com
 
வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை விழா  Jan 8, 16
 
வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.

இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி மற்றும் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.