Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ரூ.5 கோடியில் சாலை பணி பூமி பூஜையுடன் துவக்கம்  Jan 7, 16
 
தேவகோட்டையில் மோசமாக உள்ள ரோடுகளை சீரமைத்து புதியதாக போடுவதற்கு சிறப்பு சாலை திட்டத்தில் அரசு ரூ.5 கோடி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த டிச.9ல் நகராட்சிக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

நகராட்சி தலைவர் சுமித்ரா தலைமையில், கவுன்சிலர் சிவக்குமார் முன்னிலையில் அருணகிரி பட்டிணம் முத்துமாரியம்மன் கோயில் அருகே பூமிபூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டது.
எம்.பி.செந்தில்நாதன் பணியை துவக்கி வைத்தார்.