Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டைகருப்பர் கோயிலில் ரூ.1.10 லட்சம் திருட்டு  Jan 5, 16
 
நாட்டரசன்கோட்டை கருப்பர் கோயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக, செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டரசன்கோட்டையில் உள்ள கருப்பர் கோயிலில் பூசாரி சுப்பிரமணியன் வழக்கம்போல் பூஜைகளை முடித்து, திங்கள்கிழமை இரவு நடை சாத்திவிட்டு சென்றுவிட்டார். செவ்வாய்க்கிழமை காலையில் பூசாரி கோயிலின் நடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கோயிலில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் சுவாமிக்கு சார்த்தப்படும் 2 கிலோ எடையுள்ள வெள்ளி அங்கி உள்ளிட்ட பொருள்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் பணமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1.10 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பூசாரி சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.