Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை நகரத்தார் தம்பதியரை தாக்கி வீடு புகுந்து கொள்ளை  Jan 4, 16
 
நெற்குப்பையில் ரேடியோ பொட்டல் அருகில் வயதான தம்பதியர், ரத்தினம் செட்டியார் -ராமாயி ஆச்சி வசித்து வருகிறார்கள் .இவர்களது வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து உள்ளது .

ஜனவரி 2 தேதி இரவு சுமார் 11 மணி அளவில் அதன் வழியே வந்த 3 முகமூடி கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி , மிரட்டி தாக்கினர் . ராமாயி ஆச்சி கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் மோதிரம் , ரத்தினம் செட்டியார் கை விரலில் இருந்த மோதிரம்( மதிப்பு 12 பவுன்) மற்றும் ரொக்கம் 12,000/- எடுத்துக்கொண்டு டூ வீலரில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிவகங்கையில் இருந்து மோப்ப நாய் சாம்ராட் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முருகதாஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.