Nagaratharonline.com
 
காரைக்குடியில் வீடு புகுந்து 22 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு  Nov 23, 15
 
காரைக்குடி டி.டி. நகர் பகுதியில் வசித்து வருபவர் நாச்சம்மை (60). இவர், தனது கணவர் கணேஷுடன் 2 நாள்களுக்கு முன் சபரிமலைக்குச் சென்றிருந்தார்.

இதையடுத்து திங்கள்கிழமை காலையில் அவர்கள் வீட்டைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை அகற்றி அந்த துவாரம் வழியே மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 22 பவுன் தங்க நகைகளையும், 1 கிலோ வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.