Nagaratharonline.com
 
NEWS REPORT: இளையாத்தங்குடி பட்டினசாமி நகரத்தாரின் ஆத்மநாதர் கோயில் கும்பாபிஷேகம்  Nov 23, 15
 
இளையாத்தங்குடி பட்டினசாமி நகரத்தாரின் செளந்தரநாயகி அம்பாள் உடனாய ஆத்மநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இம்மாதம் 18ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 5ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜையும், நாடி சந்தனமும், பூர்ணாஹூதியும் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனையுடன் கடப்புறப்பாடு நடைபெற்றது.

காலை 10.05 மணிக்கு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.