Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளிக்கான விழிப்புணர்வு பேரணி  Nov 4, 15
 
பொன்னமராவதியில் விபத்தில்லாத் தீபாவளி அமைய சமூக நல விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி உள்கோட்ட சரக காவல் துறை, பொன்னமராவதி தீயணைப்பு,மீட்புப்பணிகள் துறை, பொன்னமராவதி அரிமா சங்கம் இணைந்து நடத்திய பேரணி, சேங்கைஊரணி அருகே தொடங்கி முக்கிய வீதிகளில் வந்து சிவன் கோயில் திடலில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்றோர் பதாகைகள் ஏந்தியும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் வந்தனர்.

அரிமா சங்க நிர்வாகிகள், புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கரு. பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து விபத்தில்லாத் தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தனர்.