Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ஆதார் அட்டைக்குபோட்டோ எடுக்க மக்கள் அலைக்கழிப்பு  Nov 2, 15
 
தேவகோட்டை பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க வருபவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.தேவகோட்டை நகரில் வசிப்பவர்களுக்கு நகராட்சி அலுவலக வளாகத்திலும், கிராமப்புற மக்களுக்கு தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்திலும் ஆதார் அட்டைக்காக போட்டோ எடுக்கப்படுகிறது.
நகராட்சியில் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பத்தை கொடுத்த பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் மூலம் தகவல் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் வந்து போட்டோ எடுத்துச் சென்றனர். தற்போது, விண்ணப்பங்களை போட்டோ எடுக்கும் இடத்திலேயே கொடுக்கின்றனர்.
தற்போது போட்டோ எடுக்க தினமும் 15 டோக்கன் கொடுக்கப்படுகிறது. ஒரே வீட்டில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் போட்டோ எடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது.

படம் எடுத்தவர்களுக்கு போட்டோ எடுத்ததற்கான ரசீது பிரிண்டர் பழுதால் வழங்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறப்பட்டது.