Nagaratharonline.com
 
காரைக்குடியில் குண்டும் குழியுமான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதி  Oct 31, 15
 
காரைக்குடியில், மெ.மெ., வீதி முதல் எஸ்.ஆர்.எம்., தெரு சந்திப்பு ரோட்டில் இருபுறமும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை, ராமேஸ்வரம் பஸ்கள் கொப்புடையம்மன் கோயில், மெ.மெ.,வீதி, எஸ்.ஆர்.எம்.,வீதி, செஞ்சை வழியே சென்று வருகின்றன.

இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இந்த ரோடு உள்ளதால், கொப்புடையம்மன் கோயிலில் இருந்து எஸ்.ஆர்.எம்., தெரு முடிய ரூ.65 லட்சத்தில் பேவர் பிளாக் கல் பதிக்கவும், மெ.மெ.வீதி, எஸ்.ஆர்.எம்., தெரு சந்திப்பு வளைவு பகுதியில் ரூ.45 லட்சத்தில் பாலம் கட்டவும், காரைக்குடி எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து நிதி ஒதுக்கினர். ஆனால், நிதி ஒதுக்கி பல மாதங்களாகியும் பணி நடக்கவில்லை.
இதனால் மெ.மெ.வீதி, எஸ்.ஆர்.எம். சந்திப்பு வளைவில் "மெகா பள்ளமாக' காட்சி அளிக்கிறது. மழைகாலங்களில் டூவீலரில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.