Nagaratharonline.com
 
பொன்னமராவதி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்  Oct 22, 15
 
பொன்னமராவதியில் சீரமைப்புப் பணிகள் நிறைவுற்ற பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வவெளியிட்ட அறிக்கை:

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவுற்ற நிலையில், பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவராமல், மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இதனால் அண்ணாசாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் தங்க வசதி இல்லை. மேலும், இயற்கை உபாதைகளுக்கான கழிப்பிடம் இல்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

மேலும், திருமண வைபவங்கள் மற்றும் கோயில் விழாக்களும் அதிகமாக நடைபெற உள்ளன. எனவே, பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.