Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கனமழை: மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன  Oct 12, 15
 
பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மையில் (அக்.10) பெய்த மழையினால் அப்பகுதிகளில் மரம் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.

பொன்னமராவதி பகுதியில் சனிக்கிழமை இடி,மின்னலுடன் கன மழை பெய்தது. இம்மழையினால் கண்டியாநத்தம் கிராமத்தில் 3 மின்கம்பங்கள் மற்றும் உலகம்பட்டி சாலையில் மரம் கீழே சாய்ந்து விழுந்தன.

எனினும், விவசாயிகளின் ஏக்கம் தீர்க்கும் விதமாக இந்த மழைப்பொழிவு அமைந்தது.