Nagaratharonline.com
 
திருமலையில் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம்  Aug 30, 15
 
திருமலையில் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
திருப்பதி திருமலைக்கு சொந்த வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் அங்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல் நிரப்புவதில் சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டதால் மூடப்பட்டது.
இதனால், திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடவேண்டுமெனில், திருமலையில் இருந்து கீழ் இறங்கி திருப்பதிக்கு வந்து கேனில் பெட்ரோலை வாங்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்திற்குள்ளாயினர். இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுவினருக்கு தெரியவந்ததையடுத்து, சனிக்கிழமை (ஆக.29) முதல் திருமலையில் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி திறந்துவைத்தார்.