Nagaratharonline.com
 
காரைக்குடியில் நாளை கம்பன் அடிப்பொடி பெயரில் விருது வழங்கும் விழா:  Aug 6, 15
 
காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் நினைவாக, கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

இது குறித்து, கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் தெரிவித்ததாவது: காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எழுத்துத் தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனருமான ப. சிதம்பரம் தலைமை வகித்து, கம்பன் அடிப்பொடி விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதியை பாராட்டி, கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, காரைக்குடி கம்பன் கழகம் செய்து வருகிறது என்றார்.