Nagaratharonline.com
 
ஆ. தெக்கூரில் பைக் மீது வாகனம் மோதல் :நெற்குப்பை இளைஞர் சாவு  Jul 20, 15
 
தெக்கூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பைக் மீது வாகனம் மோதி உயிரிழந்தார்.

நெற்குப்பையைச் சேர்ந்தவர் முகமதுகாசீம். இவரது மகன் அப்பாஸ் (34). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நெற்குப்பையிலிருந்து சிங்கம்புணரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது தெக்கூரில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் அப்பாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து நெற்குப்பை போலீஸார் வழக்குப் பதிந்து பைக் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.