Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதி பேருந்து நிலையம் தாற்காலிக இடமாற்றம்  Jul 18, 15
 
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் பணிகள் முடியும் வரை அழகிய நாச்சியம்மன் கோயில் அருகே தாற்காலிக இடத்தில் பேருந்து நிலையம் செயல்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையத்தில், இயக்கம் மற்றும் இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ், ரூ. 48 லட்சத்தில் புனரமைப்பு மற்றும் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, 17-ம் தேதி முதல் பணிகள் முடியும் வரை தாற்காலிகமாக அழகிய நாச்சியம்மன் கோயில் அருகே பேருந்து நிலையம் செயல்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகள் தாற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தி பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.