Nagaratharonline.com
 
புதிய டிசைன்களில் செட்டிநாடு கைத்தறி சேலைகள்  Jul 12, 15
 
வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் காரைக்குடி செட்டிநாடு கைத்தறி சேலைகள் புதிய வண்ணங்களில், புதிய டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை மேலாண்மை இயக்குநர் டி.என். வெங்கடேஷ் தெரிவித்தார்.

வரவிருக்கும் பண்டிகை காலத்துக்குத் தேவையான அளவுக்கு கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கோ-ஆப் டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. உற்பத்தியின் நிலவரங்கள் குறித்து காரைக்குடியில் கைத்தறி நெசவாளர்கள் மையங்களை சனிக்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2 மாதங்களில் மட்டும் ரூ.17 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம். மிக பிரசித்தபெற்ற செட்டிநாடு சேலைகளுக்கு கண்காட்சிகளில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது.