Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சியில் திட்டப் பணிகள் ஆய்வு  Jun 17, 15
 
நெற்குப்பை பேரூராட்சியில் திட்டப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்கு வந்த பேரூராட்சி திட்டப் பணிகள் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, அங்குள்ள வள மீட்புப் பூங்காவில் குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணியையும், அவற்றில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் களப் பணியையும் பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார். பின்னர் 2014-15ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவித் திட்டத்தின் மூலம் நடைபெறும் தார்ச் சாலை மற்றும் சிமிண்ட் சாலை பணிகளையும், பொது நிதித் திட்டம் மூலம் நடைபெறும் குளங்கள் தூர்வாறும் பணிகளையும், 2012- 13 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத் திட்டத்தின் மூலம் பரியாமருதிபட்டியில் பார்வையாளர்கள் அறை மற்றும் கலாச்சார கட்டடப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.