Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தின் 8ஆவது தாலுகாவாக காளையார்கோவில் உதயமாகிறது.  Jun 2, 15
 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) திறந்து வைக்கிறார். இது மாவட்டத்தின் 8ஆவது தாலுகாவாகும்.

மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 6 தாலுகாக்கள் இருந்தன. 7 ஆவதாக திருப்புவனம் தாலுகா 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தற்போது 8ஆவது தாலுகாவாக காளையார்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.