Nagaratharonline.com
 
காரைக்குடியில் வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு  Jun 2, 15
 
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமை வழக்குப் பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி பாரி நகர் அம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரசவத்துக்காக மேலூர் சென்றுள்ளாராம். அவரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் சனிக்கிழமை அங்கு சென்று விட்டு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், மரக் கதவு கழற்றப்பட்ட நிலையிலும் இருந்ததைக் கண்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 8 பவுன் நகை, முக்கால் கிலோ வெள்ளி ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.