Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் மழை: வேருடன் சாய்ந்த 150 ஆண்டுகள் பழைமையான அரசமரம்...  May 29, 15
 
பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பொன்.புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது.

இந்த மரம் அருகேயிருந்த எம். ராஜாமணி என்பவரின் ஓட்டுவீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் மேல்கூரை முற்றிலும் சேதமடைந்தது.

வீட்டில் இருந்தவர்கள் முன்புறம் உள்ள அறையில் இருந்ததால் காயமின்றி தப்பினர். மேலும், வீட்டின் அருகேயிருந்த மின்கம்பமும் சேதமடைந்தது. பேரூராட்சி பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.